Sarkarai noyin Padum Tamil Vaithiyam 13 தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள்.
No comments yet