Sarkarai noyin Padum Tamil Vaithiyam 18
அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க.
No comments yet