read.cash Log in
@Entertainment-Creator

Tamil jothida palan 3

அதாவது ஷஷ்டியில் விரதம் இருந்தால் -அகப்பை (கருப்பை)வளரும் என்பதாகும். இந்த பழமொழியை கொண்டே இதன் சிறப்பை அறியலாம். மேலும் திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும். மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும். சந்திராம்ஸ விரதம் என சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.