Panni kooda singagalaka vara vaipirukirathu Tamil
உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றாகவும், மொழி எல்லைகளைக் கடந்து மனிதகுலம் கொண்டாடும் நூலாகவும் திகழ்வது திருக்குறள் ஆகும். தமிழின் அடையாளமாகத் திகழும் இந்நூலில் தமிழ் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் தமிழின் சிறப்பை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார் வள்ளுவர். அதுபோல அழகு என்ற சொல்லே திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை. அச்சொல்லுக்கு இணையாக கவின், எழில், அணி ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர் பார்வையில் எது அழகு என்பதையும், அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கினையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது. உறுப்புகளின் அழகு உடலில் அமைந்துள்ள உறுப்புகளின் அமைப்பைப் பற்றிக் கூறுவது சாமுத்ரிகா லட்சனம். மனித உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகப் போற்றப்படுகிறது. சிலைகளிலும், ஓவியங்களிலும் அழகு என்ற கூறு இதை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. ஆனால் வள்ளுவரோ அன்புடைமை என்ற அதிகாரத்தில்,
2 comments
சிலவிஷமிகள் துவக்கியது எனலாம்... நாளை நீங்கள் படிக்கும் பழக்கம்தான்உங்களை
Dont understand the language! But it would be something great!